நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளை மறுநாள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 1126 போலியோ சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் 19.2.2012 அன்றும் இரண்டாவது தவணை 15.4.2012 அன்றும் நடைபெறவுள்ளது.
முதல ் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் நாளான 19.2.2012 அன்று சென்ன ை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் ஐந்தரை இலட்சம் குழந்தைகளுக்கு போலிய ோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1126 சொட்டுமருந்து மையங்கள ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல் தவணை போலியோ சொட்டுமருந்த ு 19.2.2012 அன்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்க ு, சென்னை மாநகராட்சி நலவாழ்வ ு மையங்கள ், அரசு மருத்துவமனைகள ், பள்ளிகள ், மருந்தகங்கள ், சத்துணவ ு மையங்கள ், தனியார் மருத்துவமனைகள ், பொருட்காட்சி அரங்கம ், இரயில்வ ே நிலையங்கள ், பேருந்து நிலையங்கள ், சொட்டுமருந்து மையங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மெரினா கடற்கர ை, சுற்றுலா பொருட்காட்ச ி, புறநகர் பேருந்து நிலையங்களில ் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள ் ஏற்படுத்தப்பட்டுளளது.
மற்ற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தம ் காரணமாக சென்னை மாநகரில் குடியேற ி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்கள ் இந்த நாளில் அதாவது 19.2.2012 அன்று தங்கள் குழந்தைகளுக்கு போலிய ோ சொட்டுமருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். அத ு மட்டுமின்றி 19.2.2012 அன்று சென்னை வந்து போகும் குழந்தைகளுக்கும் தவறாமல ் சொட்டுமருந்து போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்க ி இடைவெளியின்றி மாலை 5.00 மணிவரை தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்ப ில் தெரிவிக்கப்பட்டுள்ளது.