Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்க சென்ற மாணவர் விபத்தில் பலி.. கதறி அழுத பெற்றோர்..!

Mahendran
திங்கள், 13 மே 2024 (14:48 IST)
பிளஸ் 2 முடித்த மாணவர் கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்க சென்றபோது ரயிலில் ஏறியதாகவும் அப்போது அவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்ததாக வெளி வந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் 
 
சென்னை எண்ணூர் காமராஜர் நகரை சேர்ந்த முகமது நபில் என்ற 17 வயது மாணவர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலையில் அவர் ஆவடியில் உள்ள கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் வாங்க சென்றார் 
 
அப்போது அவர் ஆவடி ரயிலில் எண்ணூர் ரயில் நிலையத்திலிருந்து ஏறிய போது எதிர்பாராத வகையில் திடீரென தவறி விழுந்தார். இதனை அடுத்து அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் 
 
கல்லூரிக்கு விண்ணப்பம் வாங்க சென்ற தங்களது மகன் ரயில் விபத்தில் பலியானது குறித்து கேள்விப்பட்ட அவரது பெற்றோர் கதறி அழுதது காண்போர் நெஞ்சத்தை உருக வைக்கும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் இது குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

பச்சை புள்ளைன்னு பாக்கல.. அவன சுட்டுக் கொல்லணும்! சிறுமியின் தாயார் கண்ணீர்! - அமைச்சர் ரியாக்‌ஷன் என்ன?

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments