Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமியை 28க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

சிறுமியை 28க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
, புதன், 14 அக்டோபர் 2015 (15:56 IST)
17 வயது சிறுமியை தந்தை சகோதரன் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் காவல்துறை உதவி ஆய்வாளர் உள்பட இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
 
சிவகங்கை ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமியை பல ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து தந்தை, அண்ணன், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்டக்டர், அண்ணனின் நண்பர்கள் என பலரும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
 
இதில், மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், காவல்துறை உதவி ஆய்வாளர், காவல்துறை ஆய்வாளர், ஏ.டி.ஜி.பி. ஆகியோரும் தன்னை பாலியல் கொடுமைப்படுத்தியதாக விசாரணைக் குழுவிடம் அந்த சிறுமி தெரிவித்திருந்தார்.
 
இந்த விவகாரத்தில் இதுவரை சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, அண்ணன் கார்த்திக் ஆகியோரையும் சேர்த்து 8 பேர் கைதாகி உள்ளனர். முக்கிய அதிகாரிகள் பலரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil