Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்கு விளையாட வந்த சிறுமிகள் கொடூர பலாத்காரம்: 16 வயது பையன் கைது!

வீட்டுக்கு விளையாட வந்த சிறுமிகள் கொடூர பலாத்காரம்: 16 வயது பையன் கைது!

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (10:54 IST)
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகில் 4 வயதான சிறுமிகள் இருவரை 16 வயது சிறுவன் ஒருவன் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.


 
 
கடந்த சனிக்கிழமையன்று இரண்டு சிறுமிகளும், பக்கத்து வீட்டில் உள்ள சிறுவன் ஒருவனின் வீட்டுக்கு விளையாட சென்றுள்ளனர். அப்போது சிறுவனின் வீட்டில் அவனை தவிர வேறு யாரும் இருக்கவில்லை.
 
வீட்டில் யாரும் இல்லாத இந்த வாய்ப்பை பயன்படுத்திய அந்த சிறுவன் வீட்டின் கதவை பூட்டிவிட்டு இரண்டு சிறுமிகளையும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனை பெற்றோர்களிடம் மறைத்த அந்த சிறுமிகள் இரண்டு நாட்கள் கழித்து தங்கள் உறுப்பு வலிப்பதாக பெற்றோர்களிடம் கூற விஷயம் வெளியே தெரிந்துள்ளது.
 
இதனையடுத்து அந்த சிறுவன் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, விசாரணை நடத்தி அந்த சிறுவனை கைது செய்து வேலூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அந்த சிறுவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர் கலைச்செல்வி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்