Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

16 வயது பெண் பலாத்காரம்; இளைஞர் கைது

16 வயது பெண் பலாத்காரம்; இளைஞர் கைது
, சனி, 18 மே 2013 (12:02 IST)
FILE
வேலூர் அணைக்கட்டு அருகே 16 வயது பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த திருமணமான இளைஞரை வேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதி கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (28). திருமணமான இவர், அவரது உறவினரின் 16 வயது மகளை வீட்டு வேலைக்கு அழைத்துச் வந்து அவரது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

வீட்டு வேலைக்காக வந்த இளம் பெண்ணை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்பெண் கர்ப்பிணியான நிலையில் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதனால் அப்பெண் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil