Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட 158 பேர் கைது: சென்னையில் பரபரப்பு

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (22:41 IST)
சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அவ்வப்போது எச்சரிக்கை செய்தும் பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது 
 
குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பைக் ரேஸில் அதிக இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஒரே நேரத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட 158 பேர் பிடிபட்டதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் கிறிஸ்மஸ் தினத்தின் முந்தைய நாள் நேற்று இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் ரேசில் இவர்கள் ஈடுபட்டதாகவும் இதனையடுத்து போலீசார்கள் தகவல் அறிந்ததும் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments