Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 14 ரவுடிகள் கைது! நெல்லையில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (09:01 IST)
நெல்லையில் குற்றச்செயல்கள் அதிகம் நடப்பதாக கடந்த சில மாதங்களாக புகார்கள் குவிந்த நிலையில் இன்று காலை நகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினர் இன்று ஒரே நாளில் 14 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ரவுடிகளில் இருந்து ஆபத்தான் 9 நாட்டு வெடிகுண்டுகளும், 27 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 14 ரவுடிகளில் கொலை வழக்கில் தேடப்பட்ட கண்ணபிரான், குமளி ராஜ்குமார் உள்ளிட்டோர் அடங்குவார்கள் என்றும், நெல்லை நகரின் அமைதிக்காக இதேபோன்ற கைது நடவடிக்கை தொடர்ந்து இருக்கும் என்றும் நெல்லை போலீசார் தெரிவித்துள்ளனர்.

நெல்லையில் இன்று ஒரே நாளில் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் இனி குற்றச்செயல்கள் குறையும் என்றும், இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments