Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையினர் அட்டகாசம்..!

Siva
திங்கள், 10 பிப்ரவரி 2025 (08:13 IST)
நேற்று, 14 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதி வருகிறார். இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரணை தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அதன்பின் கடற்படை முகாமுக்கு கைது செய்யப்பட்டவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் லட்டு விவகாரம்.. அதிரடியாக 4 பேரை கைது செய்த சிபிஐ..!

ஆடியோ பதிவுகள் வைரல்.. பதவியை ராஜினாமா செய்த மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங்..!

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments