Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீம் பார்க்கில் தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (17:15 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் தீம் பார்க்கில் தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மல்லூரியில் ஒரு தனியார் தீம் பார்க் செயல்பட்டு வருகிறது. தற்போது, பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள், சிறுவர்கள் எனப் பலறும் தங்கள் குடும்பத்துடன் இந்த தீம் பார்க்கிற்கு வந்து விளையாடி மகிழ்கின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் எருமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயதான செளடேஸ்வரன் கோடை விடுமுறைக்காக தன் குடும்பத்தினருடன் இந்த தீம் பார்க் சென்றுள்ளார்.

அப்போது, நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தபோது, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments