Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் போச்சு.. வெயில் வந்திடுச்சு! 13 இடங்களில் சதமடித்த வெயில்!

Webdunia
திங்கள், 15 மே 2023 (09:09 IST)
தமிழ்நாட்டில் அக்கினி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது.

கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் அக்கினி வெயில் காலம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. எனினும் வங்க கடலில் உருவான மோக்கா புயல் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்ததால் வெப்பநிலை குறைவாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் வெப்பநிலை வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடலூர், ஈரோடு, கரூர், பரமத்தி, மதுரை, சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருத்தணி என 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல பகுதிகளில் வெப்பநிலை கணிசமாக உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments