Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு இரண்டு நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள்! – தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்!!

Webdunia
வியாழன், 13 மே 2021 (12:34 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்குள் தமிழகத்திற்கு 11.4 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 1.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசிகள் வந்த பிறகு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments