திரிகோணமலை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளார் மீனவர் கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 13 மீனவர்கள் கடந்த 8ஆம் தேதி இரண்டு படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். திரிகோணமலை அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை திரிகோணமலைக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்று காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
இதனிடையே இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 13 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்கக் கோரி நாகை மாவட்ட மீனவ கிராமங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.