காப்பி அடித்ததாக கண்டித்த ஆசிரியர்கள்.. 12ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (13:37 IST)
தேர்வில் காப்பி அடித்ததாக 12ம் வகுப்பு மாணவியை 5 ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்பட்ட நிலையில் மனமுடைந்த அந்த மாணவி வீட்டுக்கு சென்று தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஐந்து ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் விழுப்புரத்தில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுதிய போது அவருக்கு காப்பி அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 
 
மேலும் அந்த மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து  டிசி பெற்றுக்கொள்ள ஆசிரியர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் மணமுடைந்த 12 ஆம் வகுப்பு மாணவி வீட்டுக்கு சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
இதனை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக விழுப்புரம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஐந்து பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணைய வாய்ப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு கருத்து

அடுத்த கட்டுரையில்
Show comments