Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி: தேர்வுத்துறையின் முக்கிய தகவல்...!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (13:43 IST)
கடந்த சில நாட்களாக 12ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி முற்றிலும் முடிவடைந்து விட்டதாக தேர்வு துறை தெரிவித்துள்ளது. 
 
12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தமிழக முழுவதிலும் 79 மையங்களில் நடந்து வந்த நிலையில் முப்பதாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் தற்போது முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்டமாக மதிப்பெண்களை துவக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த பணி முடிந்து விடும் என்றும் தேர்வுத்துறை துறவித்துள்ளது. 
 
எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி மே எட்டாம் தேதி காலை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அதில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் தற்போது 11-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் அந்த பணியும் நாளை முடிவடைந்து விடும் என்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என்றும் தேர்வுத்துறை கூறியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments