தமிழகம் முழுக்க, 126 இ சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுக்க உள்ள, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடத்தப் பெறும், அரசு இ சேவை மையங்களில், பொது மக்கள் பயன் பெறும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்தும் வசதியை, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.