Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒரே இரவில் 123 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்

Webdunia
சனி, 9 ஜனவரி 2016 (17:47 IST)
நேற்று இரவில் 123 உதவி ஆணையர்களை தமிழகம் முழுவதும் இடமாற்றம் செய்ய கூடுதல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன் 23 மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள், 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முதன்மை செயலாளர் உத்தரவிட்டார்.
 
சென்னையில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி செய்த மேலும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 128 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் காவல் ஆணையர் டிகே.ராஜேந்திரன்.
 
தமிழகம் முழுவதும் 3 அல்லது அதற்கு மேல் ஒரே இடத்தில் பணி புரியும் காவல் துறை அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதின் பேரிலேயே இந்த இடமாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments