Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கு 5, அதிமுகவுக்கு 4 , திமுகவுக்கு 3: இதில் கூட தினகரனுக்கே அதிகம்

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (10:15 IST)
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொகுதியில் அரசியல் கட்சிகளும் தினகரன் உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதுமே களைகட்டியுள்ளது.

இந்த நிலையில் அனுமதியின்றி தொகுதிக்குள் நுழைந்ததாக நேற்று 12 வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவைகளில் தினகரன் அணியை சேர்ந்த 5 வாகனங்கள், அதிமுகவை சேர்ந்த 4 வாகனங்கள் மற்றும் திமுகவை சேர்ந்த 3 வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்னும் அதிகளவிலான வாகனங்கள் அனுமதி பெறாமல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த வாகனங்களும் காவல்துறையினர் உதவியுடன் பறிமுதல் செய்யப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments