Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக கனமழை முதல் கனமழை வரை... எங்கெங்கு தெரியுமா?

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (12:54 IST)
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. 
 
தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கியதை தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வருகிறது. தாமதமாக பருவமழை தொடங்கியிருந்தாலும் மழை பொழிவு முந்தைய ஆண்டை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அனைத்து விதமான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே தற்போதைய தகவலின் படி தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, மதுரை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என தகவல். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments