Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை தேர்த்திருவிழாவில் பயங்கர விபத்து: 12 பேர் பரிதாப பலி!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (07:22 IST)
தஞ்சாவூரில் தேர் திருவிழாவின் போது நிகழ்ந்த பயங்கர விபத்தில் 12 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தஞ்சை அருகே களிமேடு என்ற பகுதியில் அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது
 
இந்த தேர் வீதிகளில் உலா வந்தபோது திடீரென உயர் அழுத்த மின்சார கம்பி தேரில் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் இரண்டு சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை நடைபெறும் இந்த திருவிழாவில் உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலியானதால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments