1189 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாணவி முதலிடம்
, செவ்வாய், 22 மே 2012 (13:41 IST)
பிளஸ் 2 பொதுத்தேர்வில் நாமக்கல்லை சேர்ந்த மாணவி சுஷ்மிதா மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். இதே மாவட்டத்தை சேர்ந்த மாணவ - மாணவிகள் இரண்டு, மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். நாமக்கல் எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளி மாணவி சுஷ்மிதா 1200க்கு 1189 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்.இயற்பியல், வேதியியல், உயிரியல், கணித பாடங்களில் இவர் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தை நாமக்கல் மாணவர்கள் கார்த்திகா, அசோக்குமார், மணிகண்டன் ஆகியோர் பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் ஆயிரத்து 188 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.இவர்களில் கார்த்திகா நாமக்கல் எஸ் கே வி மேல்நிலைப்பள்ளி மாணவி. அசோக்குமார் நாமக்கல் கிரீன்பார்க் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்.
மணிகண்டன் நாமக்கல் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவராவார். 3 வது இடத்தை மகேஸ்வரி, பிரபா சங்கரி ஆகிய இரண்டு மாணவிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் 1187 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.இவர்களில் மகேஸ்வரி திருச்செங்கோடு வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி. , பிரபா சங்கரி நாமக்கல் எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்தவர்.