Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. சென்னையில் இயங்கி வந்த 11 ஸ்பாக்களுக்கு சீல்..!

Siva
ஞாயிறு, 3 மார்ச் 2024 (09:29 IST)
சென்னையில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வந்த 11 ஸ்பா சென்டர்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் தற்போது மசாஜ் செய்யும் ஸ்பா சென்டர் அதிகரித்து வருகிறது என்பதும் பெரிய பணக்காரர்கள் இந்த ஸ்பா சென்டர்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிந்தது.

ஆனால் அதே நேரத்தில் பல ஸ்பா சென்டர்களில் மசாஜ் தொழில் செய்யும் பெயரில் பாலியல் தொழில் செய்யப்பட்டு வருவதாக அவ்வப்போது காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது.

அந்த வகையில் தற்போது அதிரடியாக சென்னையில் உள்ள அனைத்து ஸ்பா சென்டர்களில் சோதனை நடந்தபோது உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 11 ஸ்பா சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

மேலும் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் சில இடங்களில் நடந்தது என கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்