Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாக்கு மூட்டையில் 10ம் வகுப்பு மாணவியின் சடலம்: கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (08:53 IST)
கோவையில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் சடலம் சாக்கு மூட்டைகளில் இருந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் கோவை பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கோவையை சேர்ந்த சரவணம்பட்டி என்ற பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் அவர் கை கால்கள் கட்டப்பட்டு சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த விவகாரம் குறித்து சரவணம்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் பணம் நகைக்காக கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டரா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என்று கூறப்படுகிறது 
 
பத்தாம் வகுப்பு மாணவி சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்