Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது – வழக்கம் போல மாணவிகள் அசத்தல் !

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (10:03 IST)
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மாணவர்களின் பெற்றோர் அலைபேசிகளுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகளும், ஆயிரம் தனித் தேர்வர்களும் எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கெனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இருப்பினும் இணையதளங்கள் மூலமாகவும் மாணவ, மாணவிகள் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தற்போது முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மொத்த தேர்ச்சி 95.25  சதவீதமாகவும் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 93.5 சதவீதமாகவும் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 87 சதவீதமாகவும் உள்ளது.

தேர்வு முடிவுகளை இணையத்தில் அறிந்துகொள்ள
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in 
www.dge2.tn.nic.in 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments