Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது – வழக்கம் போல மாணவிகள் அசத்தல் !

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (10:03 IST)
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மாணவர்களின் பெற்றோர் அலைபேசிகளுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகளும், ஆயிரம் தனித் தேர்வர்களும் எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கெனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இருப்பினும் இணையதளங்கள் மூலமாகவும் மாணவ, மாணவிகள் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தற்போது முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மொத்த தேர்ச்சி 95.25  சதவீதமாகவும் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 93.5 சதவீதமாகவும் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 87 சதவீதமாகவும் உள்ளது.

தேர்வு முடிவுகளை இணையத்தில் அறிந்துகொள்ள
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in 
www.dge2.tn.nic.in 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments