Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப்போகிறது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விவரம் உள்ளே!!

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (14:31 IST)
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் மார்ச் 27 ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என சற்றுமுன் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 
 
மேலும், 11 ,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி அடைவார்கள் எனவும் அறிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளும் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறாது அதன் பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments