மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வளக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து 105 நாட்களுக்கு பிறகு கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது.
வனஅதிகாரி பணியிடங்களில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரி மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வனக்கல்லூரி மாணவர்கள் கடந்த 3 மாதத்திற்கு மேல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது.
இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்ததால் போராட்டத்தை மாணவர்கள் விலக்கிக் கொண்டனர்.
இதையடுத்து 105 நாட்களுக்கு பிறகு மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வனக்கல்லூரி இன்று மீண்டும் திறக்கப்பட்டது.