Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவிலில் அங்கும், இங்குமாக சிதறி கிடந்த 1000 ரூபாய் நோட்டுகள்

கோவிலில் அங்கும், இங்குமாக சிதறி கிடந்த 1000 ரூபாய் நோட்டுகள்
, செவ்வாய், 29 நவம்பர் 2016 (14:02 IST)
வேதாரண்யம் அருகே கோயில் உண்டியல் பக்கத்தில் செல்லாத 1,000 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன.


 
 
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே திருத்துறைப்பூண்டி சாலையில் ஆயக்காரன்புரத்தில் அய்யனார் கோயில் உள்ளது.

இக்கோயிலில் வெளிபுறத்திலும், திருத்துறைப்பூண்டி சாலையிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. சாலையோரம் உள்ள உண்டியலில் வாகனங்களில் செல்வோரும், பொதுமக்களும் இறங்கி சுவாமி தரிசனம் செய்து தங்களது காணிக்கைகளை போட்டு விட்டு செல்வார்கள். 
 
இந்நிலையில், கோவிலின்  உண்டியல் அருகே 1000 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடப்பதாக கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேரில் சென்று பார்த்த போது, சுமார் 40 ஆயிரம் ரூபாய் சிதறி கிடந்தது. செல்லாத என்ற அறிவிப்பால் பக்தர்கள் யாரேனும் வீசி சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விளம்பரத்துக்காக மட்டும் ரூ. 1,100 கோடி செலவு செய்துள்ள மோடி - இரண்டு மங்கள்யானுக்கு சமம்