Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
, ஞாயிறு, 24 மே 2015 (14:21 IST)
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த ரெங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், கடந்த ஆண்டு தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி தீபிகாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
 
அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டினர் கிருஷ்ணசாமியை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது.
 
இதனை விசாரணை நடத்திய தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி சுமதி, கிருஷ்ணசாமிக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil