Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த சிங்களப்படை: அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (15:50 IST)
நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை சிங்கள படை கைது செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது சிங்களப்படை சிறைபிடித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது
 
கடந்த 10ஆம் தேதி 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து நிலையில் தற்போது மீண்டும் பத்து பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.
 
கோடியக்கரைக்கு தென்கிழக்கே முல்லைத் தீவு அருகே நடுக்கடலில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இதனால் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதுபோன்ற சம்பவங்கள் தொடரா வண்ணம் நிம்மதியாக கடலுக்குள் சென்று மீன் பிடித்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments