Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அச்சுறுத்தும் அசானி புயல்.. சென்னையிலிருந்து விமான சேவை நிறுத்தம்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (09:46 IST)
வங்க கடலில் உருவான அசானி புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையிலிருந்து சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

இந்தியாவில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தற்போது அசானி புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது இன்று இரவு வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அசானி புயல் ஆந்திரா, ஒடிசா எல்லையில் கரையை கடக்க உள்ள நிலையில் ஐதராபாத், மும்பை, விசாகப்பட்டிணம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களுக்கு சென்னையிலிருந்து செல்லும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments