தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி முடிகிறது.
இந்த தேர்வை பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 54 ஆயிரத்து 679 பேர் எழுத உள்ளனர். மேலும் தனித்தேர்வர்கள் ஒரு லட்சம் பேர் எழுதுகிறார்கள். மொத்தத்தில் 8 லட்சத்து 55 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.
மெட்ரிகுலேசன் தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகள் வரும் 22ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி முடிகிறது. மெட்ரிகுலேசன் தேர்வை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 252 பேர் எழுதுகிறார்கள் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.