தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு அரசு தேர்வுத்துறை வெளியிடுகிறது. தமிழ்.வெப்துனியா.காம் இணையதத்திலும் +2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடந்த பிளஸ் 2 தேர்வை தமிழம், புதுச்சேரியில் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
இவர்களில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 6 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 7 ஆயிரத்து 969 பேர் மாணவிகள். பள்ளி மாணவ-மாணவிகளை தவிர 61,319 பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதினர்.
இந்த தேர்வு முடிவுகள் tnresults.nic.in, dge1tn.nic.in, dge2tn.nic.in, dge3tn.nic.in, www.tnpubliclibraries.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிடப்படுகிறது.
"வெப்துனியா'வின் tamil.webdunia.com என்ற இணையதளத்தில் மாணவர்கள் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.