Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நிமோனியா காய்ச்சலுக்கு ஆண்டுக்கு 40 லட்சம் பேர் பலி'

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2009 (10:50 IST)
'' உலகம் முழுவதும் 'நிமோனியா' காய்ச்சலுக்கு ஆண்டுக்கு 40 லட்சம் பேர் பலியாகின்றனர ்'' என்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மரு‌த்துவமன ை ' டீன்' டாக்டர் வி.கனகசபை தெரிவித்துள்ளார்.

ச ெ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், உலகம் முழுவதும் முதல் முறையாக நிமோனியா தடுப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. நிமோனியா காய்ச்சலால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 40 லட்சம் பேர் பலியாகின்றனர். இதில், 20 லட்சம் பேர் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். 2 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக அளவில் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

நிமோனியா காய்ச்சலுக்கு பலியானவர்களில் 98 சதவீதம் பேர் வளர்ந்து வரும் நாடுகளை சார்ந்தவர்கள் ஆவர். குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் வேகமாக மூச்சு விடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மரு‌த்துவமன ைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெறலாம். உடனடியாக சிகிச்சை பெற்றால் இந்த நோயை விரைவில் குணப்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் இருக்க குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை பெறுவதற்கு முன்னரும், பின்னரும் தாய் சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு ஒ‌ன்றரை மா தம், இர‌ண்டரை மாத‌ம், மூ‌ன்றரை மாத‌ ங்களுக்கு ஒரு முறை டி.பி.டி., தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல ், ஜன்னி போன்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இனிமேல் குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் இருக்க மஞ்சள் காமாலை 'பி' டைப், எச்.ஐ.பி. போன்ற மருந்தும் சேர்ந்து போடப்படும். மஞ்சள் காமாலை `பி', எச்.ஐ.பி. போன்ற ஊசிகள் தனியார் மரு‌‌த்துவமன ைகளில் ரூ.500 செலுத்தினால் மட்டுமே போடப்பட்டு வருகிறது. அரசு மரு‌த்துவமன ையில் இந்த ஊசி வருகிற ஜனவரி மாதம் முதல் போடப்படும். இதற்கான அறிவிப்பை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விரைவில் அறிவிக்க உள்ளார் எ‌ன்று கனகசபை க ூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments