'தானே' புயல் நிவாரண நிதிக்கு 15 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நடிகர் கமல்ஹாசன் இன்று வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து கமல்ஹாசன் இந்த நிதியை வழங்கினார்.
ஏற்கனவே 'தானே' புயல் நிவாரண நிதிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் வழங்கினார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.