Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கல்குவாரி விபத்து: நிவாரண நிதியை அறிவித்தார் முதல்வர்!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (13:38 IST)
நெல்லையில் நிகழ்ந்த கல்குவாரி விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண உதவியை அறிவித்துள்ளார் 
 
நேற்று நெல்லை கல்குவாரியில் இருந்து பாறைகள் திடீரென சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் 300 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் கல்குவாரியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராட்சத எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். மேலும் மீட்பு பணிகளுக்கு உதவ தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் அரக்கோணத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments