தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் கண்டித்து டெல்லியில் 29ஆம் தேதி விஜயகாந்த் உண்ணாவிரதம்
சென்னை , வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (15:31 IST)
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து வரும் 29ஆம் தேதியில் எனது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.தமிழக மீனவர்களின் துயரத்தை தெரியப்படுத்துவதற்காகவே இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தமிழக மீனவர்களை காக்கும் விடயத்தில் மத்திய- மாநில அரசுகள் மெத்தனமாக நடந்து வருவதாக விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.