நாமக்கல் அருகே திருமணத்துக்கு சென்றபோது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.
நாமக்கல் மாவட்டம் ஆர்.பட்டணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 9 பேர் காரில் பரமத்திவேலூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர்.
நல்லிபாளையம் என்ற இடத்தில் கார் வந்தபோது சாலைத் தப்பில் மோதி கவிழுந்தது. இதில் காரில் இருந்த 6 பேர் பலியானார்கள். இதில் 3 பெண்கள் ஆவர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.