தேர்தல் விதி மீறல் தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் உள்பட தே.மு.தி.க.வினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் பிரசாரத்துக்குச் சென்றுள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்த கட்டுப்பாடுகளை மீறியதால் பிரேமலதா உள்பட தே.மு.தி.க.வினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையெல்லாம் வெறும் கண்துடைப்பு என்று அனைத்து அரசியல் கட்சிகளும் தெரியும்.
ஆனால் இதுநாள் வரை விதிமுறைகளை மீறியதாக சம்பந்தப்பட்டவர்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுத்ததே இல்லை என்பதுதான் உண்மை.