3வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.
மேலும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், பத்திரிகையாளர் சோ ராமசாமி, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.இ.அ.தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
நீதிபதிகள், திரையுலகப் பிரமுகர்கள் இந்த பதவியேற்பு விழாக்களில் பங்கேற்றுள்ளனர்.