கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவை தி.மு.க அமைத்துள்ளது.
இந்த குழுவில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தும் என்று தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.