இதுகுறித்துத ் தமிழ க அரச ு விடுத்துள் ள செய்திக ் குறிப்பில ்,
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பிப்ரவர ி 4 ஆம ் தேதி அன்று `முழு அடைப்பு' ஒன்றை தமிழகம் தழுவிய அளவிலே நடத்தவிருப்பதாக பத்திரிகைகளில் அறிவிப்பு கொடுத்துள்ளார்கள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்ப ி ல ், தற்போது `முழு அடைப்பு' நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும், எங்கும், யாரும், `முழு அடைப்பு' நடத்தக் கூடாதென்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேது சமுத்திரத் திட்டத்திற்காக `முழு அடைப்பு' நடத்தியதாக, அ.இ. அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்திலே அது குறித்து வழக்க ு தொடரப்பட்ட ு, அந்த வழக்கு இன்னமும் நிலுவையிலே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த `முழு அடைப்பு' ந ட க்கவில்லை என்பதும், `உண்ணாவிரத'ப் போராட்டம் மட்டுமே ந ட ந்தது என்பதும்தான் உண்மை.
இந்தச் சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் 4.2.2009 அன்று `முழு அடைப்பு' நடத்துவதாகக் கூறியிருப்பது சட்டப்படி உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிரானது. எனவே இந்தப் பிரச்சனையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட் ட த ் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ க அரச ு மேற்கொள்ளும்.
பொதுமக்களுக்கும், போக்குவரத ் திற்கும், அத்தியாவசியப் பொர ு ட்களின் பரிமாற்றத்துக்கும் எந்தவிதமான இடைஞ்சலும் ஏற்படாமல் அரசு சட்டப்படி தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள ை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பது தெரிவிக்கப்படுகிறத ு" என்ற ு கூறப்பட்டுள்ளது.