பிரந்தா காரத் உத்தப்புரம் சென்ற பிரச்சனை: கருணாநிதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை , வெள்ளி, 4 டிசம்பர் 2009 (16:30 IST)
மதுரை மாவட்டம், உத்தரப்புரத்திற்கு பிருந்தா காரத் வருகை தந்தது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகளை விசாரிக்க தமிழக அரசால் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட தொழில்துறை செயலர் பரூக்கி தனது விசாரணை அறிக்கையை முதலமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத், கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி உத்தரப்புரத்துக்குள் தடையை மீறி நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்டார்.ஆனால் பிருந்தா காரத் கைது செய்யப்படவில்லை என்றும் காவல் நிலையத்தில் வைத்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் மதுரை சரக காவல்துறை துணை தலைமை ஆய்வாளர் (டி.ஐ.ஜி) அப்போது விளக்கம் அளித்திருந்தார்.இதைத் தொடர்ந்து பிருந்தா காரத் வருகை தந்தது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகளை விசாரிக்க தமிழக அரசால் விசாரணை அதிகாரியாக தொழில்துறை செயலர் எம்.எப்.பரூக்கி நியமிக்கப்பட்டார்.இந்த நிலையில் தனது விசாரணை அறிக்கையினை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதியிடம், பரூக்கி இன்று வழங்கினார். அப்போது உள்துறை செயலர் மாலதி உடன் இருந்தார்.