''இலங்கையில் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 136 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது.
நாகப்பட்டினம், காரைக்காரை சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த 12 ஆம் தேதி பிடித்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் யாழ்பாணத்தில் உள்ள பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 16ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. நாகை, காரைக்கால் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழர்களை விடுவிக்க கோரி இலங்கை அரசை மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே நாகை, காரைக்கால் , கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 136 பேரும் யாழ்பாணத்தில் உள்ள பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை நிபந்தனை ஏதும் இன்றி நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.