தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா வீடு, நண்பர்கள் வீடு உள்பட 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாகசொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் என்.கே.கே.பி.ராஜா வீட்டிற்கு இன்று காலை 7.30 மணி முதலே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஈரோடு மாவட்டம் செல்வபுரம், காஞ்சிகோவில், கவுந்தபாடி ஆயி இடங்களில் உள்ள ராஜா வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சிதம்பரம் காலனியில் உள்ள ராஜாவின் நண்பர் சரவணன், பவானியை அடுத்த காலிங்கராயபாளையத்தில் உள்ள ராஜாவின் நண்பர் மூர்த்தி ஆகியோர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் பி.மேட்டுப்பாளையம், எல்லீஸ்பேட்டையில் உள்ள கல்லூரியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.