திருமணமான 2 வது நாளில் இந்திய ரிசர்வ் படை வீரர் மனைவி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சோக நிகழ்வு புதுச்சேரியில் நிகழ்ந்துள்ளது.
புதுச்சேரி சின்னகாலால்பட்டை சேர்ந்தவர் தரகேஸ்வரி (25). இவருக்கும் மஞ்சகுப்பத்தைத் சேர்ந்த பக்ரூதீன் (27) என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. பக்ரூதீன் இந்திய ரிசர்வ் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலையில் படுக்கை அறையில் மனைவியை தேடியுள்ளார் பக்ரூதீன். பின்னர் உறவினர் வீடுகளிலும் மனைவியை பக்ரூதீன் தேடியுள்ளார். எங்கும் கிடைக்கவில்லை.
இதனிடையே சின்னகாலால்பட்டை சேர்ந்த மீனவர்கள் வலையில் இறந்த நிலையில் பெண் ஒருவர் சிக்கி கிடந்துள்ளார். இது குறித்து பக்ரூதீன் மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இறந்து கிடந்தது தரகேஸ்வரி என்று தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தரகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.