தனது ஆசைக்கு மசியாததால் கல்லூரி ஆசிரியைக்கு செக்ஸ் எஸ்.எம்.எஸ். அனுப்பிய கல்லூரி யோகா மாஸ்டர் போலீசிடம் சிக்கிக் கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த ஆறுமுகம் - காயத்ரி (36) (பெயர் மாற்றம்) தம்பதிக்கு 2 குழந்தைகள். எம்.பிஎட் படித்துள்ள காயத்ரி, கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து 5 வருடங்களாக தனியாக வாழ்ந்து வருகிறார்.
2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வந்தார் காயத்ரி. அதே கல்லூரியில் யோகா மாஸ்டராக பணியாற்றிய தங்கராஜிக்கு (40) காயத்ரி மீது ஒரு கண்.
இந்த நிலையில் காயத்ரியின் செல்போன், அடையாள அட்டையை திருடிக் கொண்ட தங்கராஜ், அந்த செல்போனில் இருந்து காயத்ரி உறவினர்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். இந்த எஸ்.எம்.எஸ்.யை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், காயத்ரியிடம் கேட்டுள்ளனர்.
அப்போது, தனது செல்போன் மாயமாகி பல நாட்கள் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார் காயத்ரி. செல்போன் நிறுவனத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, காயத்ரி செல்போனில் இருந்து தங்கராஜ் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்தது தெரியவந்தது.
அதோடு காயத்ரி அடையாள அட்டையை பயன்படுத்தி, 8 சிம்கார்டுகள் வாங்கி, அதன்மூலம் அடிக்கடி காயத்ரியை குடும்பம் நடத்த வரும்படி தொந்தரவு செய்து வந்ததும், ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதும் தெரியவந்தது. இவரது சொந்தரவு தாங்காமல் காயத்ரி குழந்தைகளுடன் தனது சொந்த ஊரான போச்சம்பள்ளிக்கு வந்து விட்டார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த காயத்ரியை தங்கராஜ் விட்டு வைக்கவில்லை. தினமும் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொந்தரவு செய்து வந்தார். இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்ட காயத்ரி போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து காஞ்சிபுரம் வந்த போலீஸ், செக்ஸ் எஸ்.எம்.எஸ். அனுப்பிய யோகா மாஸ்டர் தங்கராஜ் கைது செய்யப்பட்டார்.