பொள்ளாச்சி கிளை சிறையில் இருந்து 4 விசாரணை கைதி தப்பி ஓடிய நிகழ்வை தொடர்ந்து 3 சிறை வார்டன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சிறையில் உள்ள அறை ஒன்றில் விசாரணை கைதிகள் 12 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் திருட்டு வழக்கில் தொடர்புடைய தமிழக சேர்ந்த சையத் இப்ரகிம் (21), சதீஷ் என்ற மோகன் (19), செல்வம் (19) ஆகியோரும், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரிசா மாநிலத்தை சேர்ந்த கோமல் ரிக்கி (20) என்பவரும் நள்ளிரவு சிறையில் இருந்து கழிவுநீர் செல்லும் பாதை வழியாக பெரிய பள்ளம் தோண்டி அதில் வழியாக தப்பி சென்றுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட சத்தத்தால் விழித்த சக கைதிகள் 8 பேரும் சத்தம் போட்டுள்ளனர். அதற்குள் கைதிகள் 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே பொள்ளாச்சி சிறையில் இரவு நேர பணியில் இருந்த 3 வார்டன்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.