ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து ய ான ைகள் வெளியே வருவதை தடுக்க வனப்பகுதியில் எல்லையில் அகழி வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.
ஈரோடு வன மண்டலத்திற்குட்பட்டது ஈரோடு, சத்தியமங்கலம் வனப்பகுதி.இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, செந்நாய், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகிறது.
இந்த வனவிலங்குகளில் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து கிராம பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் புகுந்து விவசாய பயிர்களை பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து விவசாயிகள் ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண், மாவட்ட வனஅதிகாரி சதீஷ் ஆகியோரிடம் புகார் செய்தனர். இதனால் காட்டு யானைகள் வெளியே வருவதை தடுக்க வனப்பகுதியின் எல்லையில் அகழி வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வனத்துறையின் இந்த தீவிர நடவடிக்கையால் விவசாய நிலத்திற்குள் யானைகள் வருவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.