பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமை (08.02.2014) இரவு பத்து மணி அளவில், கிராண்ட் சோழா ஹோட்டலில் நரேந்திர மோடி அவர்களை வைகோ சந்தித்தார். வைகோவைப் பார்த்ததும், நரேந்திர மோடி புன்முறுவலோடு வாருங்கள் வைகோ என வரவேற்றார்.
இந்தியாவின் வருங்கால பிரதமர் நரேந்திர மோடி அவர்களை எல்லையற்ற மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் என்று கூறி, அவருக்கு பொன்னாடை அணிவித்து வைகோ ஆரத்தழுவிக்கொண்டார். மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், இமயம் ஜெபராஜ் ஆகியோரும் நரேந்திர மோடிக்கு பொன்னாடை அணிவித்தனர்.
அதன்பின்னர், மோடியும் வைகோவும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டனர். காலையில் இம்பாலில் பேசிவிட்டு, பகலில ் கவ ுகாத்தியில் பேசிவிட்டு, மாலையில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் உணர்ச்சிமிக்க உரையாற்றுவது என்பது அனைவராலும் இயலாது என்றார் வைகோ.
“இந்தியில் நீங்கள் உரையாற்றும் நிமிடங்களில் அம்மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களைக் கூட நீங்கள் எழுப்பும் உணர்ச்சி மிக்க குரல், அதன் தொனி, உங்களுடைய கரங்களும் முகமும் வெளிப்படுத்தும் பாவனை மக்களை வசீகரித்தது. இன்று நீங்கள் ஆற்றிய உரை, உன்னதமான சொற்பொழிவாகும்” என்று வைகோ கூறியபோது, “மிகச்சிறந்த பேச்சாளரான நீங்கள் அல்லவா? பாராட்டுகிறீர்கள்” என்றார் மோடி.
“இன்றைய பேச்சில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மாநில உரிமைகளை நசுக்குவதைக் கண்டித்து, கூட்டாட்சி தத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியது நாட்டுக்கு மிக அவசியமான கருத்தாகும்” என்று வைகோ கூறியபோது, “தமிழ்நாட்டுக்கு இந்தக் கருத்து மிகவும் அவசியமாயிற்றே”என்றார் மோடி.