Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

Webdunia
புதன், 2 நவம்பர் 2011 (09:45 IST)
தமிழகம் முழுதும் கனமழை பெய்துவருவதால் ஆங்காங்கே வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் வைகை ஆற்றில் முதன் முதலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணையின் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வைகை அணைக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும்.

தற்போது அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 15149 கனஅடியாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு 1260 கனஅடியாகவும் உள்ளதாக பொதுபணித்துறை அறிவித்துள்ளது.

இதனால் வைகை கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments