Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
, புதன், 2 நவம்பர் 2011 (09:45 IST)
தமிழகம் முழுதும் கனமழை பெய்துவருவதால் ஆங்காங்கே வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் வைகை ஆற்றில் முதன் முதலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணையின் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வைகை அணைக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும்.

தற்போது அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 15149 கனஅடியாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு 1260 கனஅடியாகவும் உள்ளதாக பொதுபணித்துறை அறிவித்துள்ளது.

இதனால் வைகை கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil